கொவிட் -19; குணமடைந்த கடற்படையினர் 221ஆக உயர்வு

கொவிட் -19 தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பெற்று பூரண குணமடைந்த கடற்படையினரின் எண்ணிக்கை 221ஆக உயர்வடைந்துள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

அத்தோடு, கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கடற்படையினர் 12 பேர், பூரண குணமடைந்த நிலையில் நேற்று (19) வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவர்களில் 07 பேர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 04 பேர் IDH வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் வெலிகந்த வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர். வைத்தியசாலைகளில் அவர்களுக்கு அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய,  குறித்த வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இக்கடற்படையினர் அனைவரும் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், சுகாதார ஆலோசனைகளுக்கு அமைய கடற்படையினரால் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Thu, 05/21/2020 - 15:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை