கொவிட் -19 தொற்றுக்குள்ளாகி வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த கடற்படையினர் 30 பேர், பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (14) வெளியேறியுள்ளனர்.
இக்கடற்படையினரில் 18 பேர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 10 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், ஒருவர் முல்லேரியா வைத்தியசாலையிலும், மற்றுமொருவர் IDH வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வந்தனர்.
இவ்வைத்தியசாலைகளில் அவர்கள் சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்தபோது அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதால், அவர்கள் நேற்று வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.
இக்கடற்படையினர் 30 பேர் உட்பட, வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில், இதுவரை வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 151 பேர், பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதும், மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
from tkn