ஜெர்மன் எல்லையை ஒட்டிய நெதர்லாந்து பன்றி இறைச்சி பதப்படுத்தும் ஆலை ஒன்றில் ஏற்பட்டிருக்கும் கொரோனா வைரஸ் தொற்று சம்பவங்களின் எண்ணிக்கை 147 ஆக அதிகரித்துள்ளது. அந்த ஆலை கடந்த வாரம் மூடப்பட்டு ஊழிர்கள் சுய தனிமைப்படுத்தலில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
657 பேர் பணியாற்றும் க்ரோனேலோ என்ற நகரில் இருக்கும் அந்த ஆலையில் பணியாற்றுபவர்களில் பெரும்பாலானவர்கள் ஜெர்மனியர்களாவர்.
கடந்த மே 20 ஆம் திகதி அங்கு 45 பேருக்கு கொவிட்-19 தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து சுகாதார அதிகாரிகளால் அந்த ஆலை மூடப்பட்டது.
இந்நிலையில் 79 ஜெர்மனி ஊழியர்கள் மற்றும் 68 நெதர்லாந்து ஊழியர்களுக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
“நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகம் கவலை கொள்ளச் செய்கிறது” என்று பிராந்திய பாதுகாப்பு முகவர் அமைப்பைச் சேர்ந்த டொன் ஹீர்ட் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நோய்த் தொற்றாளர்களுடன் தொடர்புபட்டவர்களை கண்டுபிடிக்கும் நடவடிக்கைகளை பிராந்திய சுகாதார நிர்வாகம் தீவிரப்படுத்தியுள்ளது.
நெதர்லாந்தில் 45,236 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டிருப்பதோடு 5,822 பேர் உயிரிழந்துள்ளனர்.
from tkn