ஈரானில் 14 வயது மகளை தந்தை கௌரவக் கொலை

ஈரானில் 14 வயது மகளை கௌரவக் கொலை செய்த சந்கேகத்தில் ஆடவர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்பட்டுத்தியுள்ளது.

ரொமினே அஷ்ரபி என்ற அந்த சிறுமி 35 வயதான காதலருடன் கிலான் மாகாணத்தில் இருக்கும் தனது வீட்டை விட்டு சென்றுள்ளார். இந்தத் திருமணத்திற்கு தந்தை எதிர்ப்பு வெளியிட்டதை அடுத்து அந்த சிறுமி இவ்வாறு நடந்துகொண்டுள்ளார்.

இந்த காதல் ஜோடியை பிடித்த பொலிஸார், தனது உயிருக்கு ஆபத்து இருப்பதாக கூறியும் ரொமினாவை அவரது வீட்டில் ஒப்படைத்துள்ளனர்.

இந்நிலையில் ரொமினா அவரது படுக்கை அறையில் வைத்து கடந்த வாரம் தந்தையால் கொல்லப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது.

மகளை அரிவாளால் வெட்டிய அந்தத் தந்தை அந்த அரிவாளுடன் வீட்டுக்கு வெளியே வந்து கொலையை ஒப்புக்கொண்டதாக ஈரான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஈரானிய சட்டத்தின்படி இந்த நபர் குற்றங்காணப்பட்டால் வழக்கமான மரண தண்டனை அல்லது பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கான இரத்தப் பணத்திற்கு பதில் தனது மகளை கொன்றதற்கு மூன்று தொடக்கம் 10 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்கப்படலாம் என நம்பப்படுகிறது.

Fri, 05/29/2020 - 06:00


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை