இதுவரை 13,556 பேர் மீது வழக்கு தாக்கல்

56,326 கைது; 15,490 வாகனங்கள் கைப்பற்றல்

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து அமுல்படுத்தப்பட்டுள்ள பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரையில் 56,326 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 15,490 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

அத்தோடு, ஊரடங்குச் சட்டத்தை மீறியமை தொடர்பில் 13,556 பேர் மீது வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளதோடு, 5,221 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல், இன்று (17) காலை 6.00 மணி வரையான காலப்பகுதியில் இக்கைதுகள் இடம்பெற்றுள்ளன.

மேலும், நேற்று  (16)  காலை 6.00 மணி முதல், இன்று (17) காலை 6.00 மணி வரையான 24 மணித்தியால காலப்பகுதியில் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 620 பேர் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 274 வாகனங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

நாட்டில் கொரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

Sun, 05/17/2020 - 10:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை