இலங்கையின் புதிய இந்திய உயர்ஸ்தானிகராக நியமனம்பெற்றுள்ள கோபால் பாக்லே நேற்று (08) இலங்கை வந்தடைந்தார்.
அத்துடன் அவர் வந்த விமானத்திலேயே இலங்கையில் கொவிட்-19 தொற்றினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தேவையான 12.5 தொன் நிறையுடைய மருந்துப் பொருட்களையும் நன்கொடையாக எடுத்து வந்துள்ளார்.
இந்திய அரசாங்கம் ஏற்கனவே இதுபோன்ற 3 தொகுதி மருந்துப் பொருட்களை இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியுள்ள நிலையிலேயே நான்காவது தொகுதி மருந்துப் பொதி புதிய உயர்ஸ்தானிகரூடாக இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இலங்கை வந்தடைந்த புதிய உயர்ஸ்தானிகர் இந்தியர்கள் சார்பில் இலங்கை மக்களுக்கு தனது வெசாக் தின வாழ்த்தையும் தெரிவித்துக் கொண்டார்.
கடந்த மார்ச் 15 ஆம் திகதி சார்க் தலைவர்களுக்கிடையே நடைபெற்ற இணைய மாநாட்டில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி சர்வதேச தொற்று நோயான கொவிட்-19க்கு எதிராக இணைந்து போராடுவோம் என்று அறிவித்திருந்தார். இதற்கமைய நான்காவது தடவையாக மேலும் ஒரு தொகுதி மருந்துப் பொருட்கள் இலங்கைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
உயர் ஸ்தானிகராக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ கோபால் பாக்லே அவர்களுடன் விசேட விமானம் ஒன்றின் மூலமாக நான்காவது தொகுதி மருந்துப்பொருட்கள் இலங்கையை வந்தடைந்தன. அத்துடன் சுகாதார நெறிமுறையை கடைப்பிடிப்பதிலும் அவர் உறுதியாகவுள்ளார். #lka https://t.co/lOBV7bkv45
— India in Sri Lanka (@IndiainSL) May 8, 2020
(லக்ஷ்மி பரசுராமன்)
from tkn