கொரோனா தொற்றிய 121 கடற்படையினர் குணமடைவு

கொவிட் -19 தொற்றுக்கு உள்ளாகி, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வந்த 59 கடற்படையினர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து நேற்று (13)  வெளியேறியுள்ளதாக, கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

கொவிட் -19 தொற்றுக்கு உள்ளான இக்கடற்படையினரில்  44 பேர் கடற்படை பொது வைத்தியசாலையிலும், 05 பேர் ஹோமாகம வைத்தியசாலையிலும், 03 பேர் முல்லேரியா வைத்தியசாலையிலும்,  மேலும் 03 பேர் IDH வைத்தியசாலையிலும்,  02 பேர் வெலிக்கந்த வைத்தியசாலையிலும், மற்றும் 02 பேர் இரணவில வைத்தியசாலையிலும் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

அவர்கள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொண்ருந்த வேளையில் அவ்வப்போது மேற்கொள்ளப்பட்ட PCR பரிசோதனை முடிவுகளுக்கு அமைய, குறித்த வைரஸ் அவர்களது உடலில் இல்லை என்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து நேற்று வெளியேறியுள்ளதாகவும், கடற்படை ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இக்கடற்படையினர் 59 பேர் உட்பட,  வைரஸ் தொற்றினால் பீடிக்கப்பட்ட நிலையில் இதுவரையில் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுவந்த 121 பேர் பூரண குணமடைந்து வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ளனர். அவர்கள் வைத்தியசாலைகளிலிருந்து வெளியேறியுள்ள போதிலும், மேலும் 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த கடற்படையினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

Thu, 05/14/2020 - 12:46


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை