வாழைச்சேனை பிரதேசத்தில் போதைதரும் நூறு மாத்திரைகளுடன் இரண்டு இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
விசேட அதிரடிப்படையினர் இவர்களைக் கைதுசெய்து வாழைச்சேனைப் பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளதாக பொலிஸ் பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன தெரிவித்தார்.
இவர்கள் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்செய்யப்பட்டதையடுத்து எதிர்வரும் 18 ஆந்திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினர்.
வாழைச்சேனை விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த இரகசியத் தகவலொன்றையடுத்து வாழைச்சேனை மற்றும் மாஞ்சோலை ஆகிய கிராமங்களில் இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர்கள் பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதை மாத்திரை வியாபாரம் செய்வதாக அறியவந்துள்ளது.
இவர்கள் நீண்டகாலமாக போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
பாசிக்குடா நிருபர்
from tkn