அமெரிக்காவில் புலிக்கு கொரோனா!

அமெரிக்காவின் நியூயோர்க் நகரிலுள்ள ப்ரோன்ஸ் வனவிலங்குப்பூங்காவில் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

நான்கு வயதான நடியா என்ற பெயர்கொண்ட மலையன் புலியே மனிதனின் மூலம்  கொரோனா தொற்றுக்குள்ளான முதலாவது மிருகம் என நம்பப்படுகிறது.

இந்தப்புலிக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதியானதையடுத்து அதற்கு அருகில் வாழ்ந்துவந்த இரண்டு சைபெரியன் புலிகள் மற்றும் ஆபிரிக்க சிங்கங்களுக்கும் அதே அறிகுறிகள் காணப்பட்டுள்ளன.

அவைகளுக்கும் தற்போது கொரோனா வைரஸ் பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றன.

மனித சமூகத்தை மிரட்டி வரும் கொரோனா வைரஸ், விலங்குகளைப் பாதிக்காது என்று பரவலாக பேசப்பட்டு வந்தன.  ஆனால், இந்தக்கூற்றைப் பொய்யாக்கும் வகையில், அமெரிக்காவின் நியூயார்க் சிட்டியில் அமைந்துள்ள புரேன்ஸ் உயிரியல் பூங்காவில் பரமாரிக்கப்பட்டு வரும் பெண் புலி ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

உயிரியல் பூங்காவில் பணியாற்றி வந்த நபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. எனவே, அந்த நபர் மூலமாக புலிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. மேலும், சில புலிகளுக்கு வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் தென்படுவதாக உயிரியல் பூங்கா நிர்வாகம் குறிப்பிட்டுள்ளது. புலிகள் மற்றும் சிங்கங்களிடம் வைரஸ் எவ்வாறு இருக்கும் என்று தெரியவில்லை. எனினும், பூங்காவில் உள்ள அனைத்து விலங்குகளையும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறோம் என்று பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.

இந்த வனவிலங்குப்பூங்கா மார்ச் மாதம் 16 ஆம் திகதியன்று கொரோனா அச்சுறுத்தலால் மூடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tue, 04/07/2020 - 10:25


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை