பலாங்கொடை வியாபார நிலையத்தில் தீ; தந்தையும் மகளும் பலி

பலாங்கொடையிலுள்ள வியாபார நிலையமொன்றில் திடீரெனத் தீ பரவியதில் தந்தையும் மகளும் உடல் கருகிப் பலியாகியுள்ளனர். 

அத்தோடு, தாயும் மகனும் படுகாயமடைந்த நிலையில் பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பலாங்கொடை, கல்கொட ருக்அத்தன பகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையமொன்றிலேயே இன்று (11) அதிகாலை தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக,  பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவத்தில் 50 வயதுடைய தந்தையும் 19 வயதுடைய மகளுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

அயல் வீடுகளில் வசித்து வந்த பொதுமக்கள் பொலிஸாரின் உதவியுடன் தீயை அணைக்க முற்பட்டபோது, வியாபார நிலையத்தின் பெரும்பகுதி எரிந்திருந்ததாக பொலிஸார்  தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை பலாங்கொடை பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.

(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)

Sat, 04/11/2020 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை