கடந்த ஆண்டு (2019) ஏப்பிரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் குண்டுத்தாக்குதல் தினத்தையொட்டி பல இடங்களிலும் ஞாபகார்த்த நிகழ்வுகள் இடம்பெற்றுள்ளன.
இந்நிலையில் மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிகுடியில் அமைந்துள்ள சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பிலும் அஞ்சலி செலுத்தும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (21) இடம்பெற்றது.
இதன்போது கடந்த ஈஸ்ட்டர் தினத்தில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலின்போது உயிரிழந்தவர்களுக்கு சுடர் ஏற்றப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டன.
சீ.மூ.இராசமாணிக்கம் மக்கள் அமைப்பின் தலைவர் இரா.சாணக்கியன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உறுப்பினர் மேகசுந்தரம் வினோராஜ் உள்ளிட்ட பலர் இதன்போது கலந்து கொண்டிருந்தனர்.
(பெரியபோரதீவு தினகரன் நிருபர்)
from tkn