பிரித்தானியா 'அன்னை சிவகாமி அறக்கட்டளை' அமைப்பின் நிவாரணம்

பிரித்தானியா 'அன்னை சிவகாமி அறக்கட்டளை'  அமைப்பின் கொரோனா நெருக்கடிக்குள்ளான மக்களுக்கு உலருணவு நிவாரணம் வழங்கும் திட்டம் அம்பாறை மாவட்டத்தில் நேற்று  அட்டப்பள்ளத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அமைப்பின் அம்பாறை மாவட்ட இணைப்பாளர் இளம் விஞ்ஞானி சோ.வினோஸ்குமாரின் ஏற்பாட்டில் அட்டப்பள்ளம் கிராம மக்களுக்கு 200உலருணவுப்பொதிகள் வழங்கப்பட்டன.

தனது அன்னையின் பேரால் கடந்த 10 வருடங்களாக சமுக சேவயாற்றிவரும் மகாதேவன் சத்தியருபன் (லண்டன்) என்பவரின் நிதியொதுக்கீட்டிலேயே இவ்வுதவி அட்டப்பள்ள தமிழ், முஸ்லிம் மக்களுக்கு கிடைத்துள்ளது.

அட்டப்பள்ளம் முத்துமாரியம்மன் ஆலயத்தில் நடைபெற்ற விசேட பூஜையின் பின்னர் ஆலயத்தலைவர் த.கோபாலன் எஸ்.மோகன் மற்றும்  பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் சோ.  தினேஸ்குமார், கிராம சேவையாளர் தொழினுட்ப உத்தியோகத்தர். உள்ளிட்டோர் நிவாரணப்பொதிகளை வழங்கினர்.

காரைதீவு குறூப் நிருபர்

Tue, 04/07/2020 - 09:50


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை