வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சொந்த இடம் செல்ல யாழ்ப்பாணத்தில் விண்ணப்பம்

அதிஇடர் வலயங்களுக்கு செல்வது தடை

யாழ்.மாவட்டத்துக்குள் வருகை தந்த வெளி மாவட்டங்களை சேர்ந்த சுமார் 5,000 பேர் தங்களுடைய செந்த மாவட்டத்திற்கு திரும்புவதற்கு விண்ணப்பித்துள்ளதாக யாழ்.மாவட்ட அரசாங்க அதிபர் கணபதிப்பிள்ளை மகேசன் தெரிவித்தார்.

விண்ணப்பித்தவர்களில் 2,000 பேர்  தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

யாழ்.மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அரசாங்க அதிபர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் கடந்த 20 திகதி தொடக்கம் இன்று வரை பிற மாவட்டத்தைச் சேர்ந்த 5,000 பேர் அந்தந்த இடங்களுக்கு செல்ல அனுமதிக்கு விண்ணப்பித்துள்ளனர்.

இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் சுமார் 2,000 பேர்  தமது சொந்த இடங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

அத்தியாவசியமாக செல்ல வேண்டியவர்களே அனுப்பப்பட்டுள்ளனர்.

அடுத்த கட்டமாக சிலர் அனுப்பப்படவுள்ளனர்.

அதிஇடர் வலயமாக கருதப்படும் மாவட்டங்களுக்கு செல்வதற்காக விண்ணப்பிப்பவர்கள் தற்போதைய நிலையில் அனுப்பப்படமாட்டார்களென அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்துள்ளார்.

Sun, 04/26/2020 - 07:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை