மின்சார சபைக்கு தினமும் ஒன்றரை கோடி ரூபா சேமிக்கும் வாய்ப்பு

அமைச்சர் மஹிந்த அமரவீர

உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் பணிகள் இன்னும் ஆறு மாதங்களுக்குள் நிறைவடையும். அதன் பின்னர் இலங்கை மின்சார சபைக்கு நாளொன்றுக்கு ஒன்றரை கோடி ரூபாவை சேமிக்கக்கூடியதாக இருக்கும் - என்று போக்குவரத்து, மின்சக்தி, சக்திவலு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

எல்ல, கரந்தகொல்ல நீர்மின் திட்டத்தின் நிர்மாணப்பணிகளை அவதானிக்கும் நோக்கில் அமைச்சர்  நேற்று (27.04.2020) கண்காணிப்பு பயணமொன்றை மேற்கொண்டார்.

அதன்பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே அமைச்சர் இந்த தகவலை வெளியிட்டார்.

இது தொடர்பில் அவர் மேலும் கூறியதாவது, "உமா ஓயா பல்நோக்கு அபிவிருத்தி திட்டத்தின் பணிகள் சற்று தாமதமடைந்துள்ளன. அதனை விரைவாக முன்னெடுப்பது பற்றி ஆராயப்பட்டது.

(ஹட்டன் சுழற்சி நிருபர்) 

Tue, 04/28/2020 - 05:37


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை