மகன் - தாய் வாய்த்தர்க்கம்; பேரனின் தாக்குதலில் நபர் பலி

கட்டுப்பொத, தெலஹெர பிரதேசத்தில் இடம்பெற்ற கொலைச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (12) இருவருக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியுள்ளது. இதன்போது ஒருவர், மற்றொருவர் மீது பொல்லினால் தாக்கியுள்ளார்.

இதில் படுகாயமடைந்த நபர், கட்டுப்பொத வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்டவர், அதே பிரதேசத்தைச் சேர்ந்த 32 வயதானவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

மரணித்தவர் தனது தாயுடன் வாய்த்தர்க்கத்தில் ஈடுபட்டுள்ள நிலையில், மரணித்தவரின் சகோதரரின் மகன் அவ்விடத்திற்கு வந்து, அவருக்கு கை, கால்களாலும், பொல்லாலும் தாக்கி கொலை செய்துள்ளதாக விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளது.

இக்கொலைச் சம்பவத்தை புரிந்ததாக சந்தேகிக்கப்படும் 32 வயதுடைய நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர்.

 

Tue, 04/14/2020 - 12:55


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை