வவுனியாவில் கடும் காற்றுடன் திடீரென பெய்த மழை காரணமாக வீடுகள் சில சேதமடைந்துள்ளதுடன், பயன்தருமரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
நேற்று (23) பிற்பகல் வவுனியாவில் திடீரென கடும் காற்றுடன் மழை பெய்தது. சுமார் ஒருமணி நேரம் குறித்த மழையானது நீடித்தது.
இதன்போது வீசிய கடும் காற்றினால் வைரவ புளியங்குளம் பகுதியில் இரண்டு வீடுகள் மற்றும் ஒரு வர்த்தக நிலையம் என்பவற்றின் கூரைகள் தூக்கி வீசப்பட்டுள்ளதுடன், மழை நீரும்உட்புகுந்துள்ளது.
குறிப்பாக ஶ்ரீ லங்கா ரெலிகொம் நிறுவனத்திற்குச் சொந்தமான உத்தியோகத்தர் விடுதி ஒன்றின் கூரை முற்றாக தூக்கி வீசப்பட்டு, மழைநீர் உட்புகுந்தமையால் அங்கிருந்த பெறுமதியான பொருட்கள் மழையில் நனைந்து நாசமாகியுள்ளன. வீட்டு வளவில் இருந்த வாழை முதலிய பயன்தரும் மரங்களும் முறிந்து வீழ்ந்துள்ளன.
(வவுனியா விசேட நிருபர்)
from tkn