நுவரெலியா பிரதேச சபை குறித்து அவதூறாக பேசினால் சட்ட நடவடிக்கை

சபைத் தலைவர் திட்டவட்டம்

நுவரெலியா பிரதேச சபையின் செயற்பாடுகள் தொடர்பில் முகநூலில் அவதூறாக பேசுவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளதாக நுவரெலியா பிரதேச சபை தலைவர் வேலு யோகராஜ் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியுள்ளதாவது,

கொரோனா வைரஸ் தாக்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம் நுவரெலியா பிரதேச சபை மக்களுக்காகச் செயற்பட்டு கொண்டிருக்கின்றது.

நுவரெலியா பிரதேச சபைக்குட்பட்ட பல தோட்டங்களில் வாழும் மக்களின் பிரச்சினைகள் அடையாளங்காணப்பட்டு தீர்த்து வைக்கப்பட்டுள்ளன. அதுமட்டுமல்ல நிவாரண வேலைத்திட்டங்களும் கட்டம் கட்டமாக செயற்படுத்தப்பட்டு வருகின்றன. எனவே அனைவருக்கும் ஏற்ற வகையிலேயே நிவாரணத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுகின்றன.

ஒருசிலர் நுவரெலியா பிரதேச சபை தொடர்பில் அவதூறான கருத்துக்களை முகநூலில் பதிவிட்ட வண்ணம் உள்ளனர். அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது என்றார்.

பூண்டுலோயா நிருபர்

Sat, 04/18/2020 - 10:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை