அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி திறப்பு

ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டதை தொடர்ந்து, தெற்கு அதிவேக நெடுஞ்சாலை போக்குவரத்திற்காக இன்று (20)  திறக்கப்பட்டுள்ளது.

கொட்டாவ தொடக்கம் அம்பாந்தோட்டை வரை இன்று காலை 7.00 மணி முதல் இரவு 7.00 மணி வரை திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டதாக, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் சமிந்த அதுலுவகே தெரிவித்துள்ளார்.

கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக வீதியிலான போக்குவரத்தை ஆரம்பிப்பதற்காக, நாளை மறுதினம் (22) அதனை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவர் தெரிவித்துள்ளார்.

Mon, 04/20/2020 - 11:52


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை