வவுனியாவில் கடற்படை வீரர் ஒருவர் கொரோ தொற்றுடன் இணங்காணப்பட்டுள்ளார்.
வெலிசறை கடற்படை முகாமில் கடமையாற்றி விடுமுறையில் வவுனியா, மகாகச்சகொடி பகுதியில் உள்ள தன வீட்டிற்கு வந்திருந்த கடற்படை வீரரிடம் மேற்கொள்ளப்பட்ட இரத்த பரிசோதனையின் போதே குறித்த வீரருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து 38 வயதான குறித்த கடற்படை வீரரை கொரோனா தடுப்பு வைத்தியச்சாலைக்கு அனுமதிப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
(வவுனியா விசேட நிருபர் - வசந்தரூபன்)
Sun, 04/26/2020 - 21:41
from tkn