ஹட்டன் டிக்கோயா நகரசபையின் ஏற்பாட்டில் தொற்றுநீக்கம்

ஹட்டன், டிக்கோயா நகர சபையின் ஏற்பாட்டில் ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்த இக்காலப்பகுதியில் பொதுமக்கள் நடமாடும் இடங்களில் இன்று (02)  தொற்றுநீக்கும் மருந்து தெளிக்கப்பட்டன.

இதன்போது பஸ்தரிப்பு நிலையம், நகரசபை இருமருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள கைப்பிடிகள், பொதுச்சந்தை , புகையிரத நிலையம் மற்றும் பொதுமக்கள் நடமாடும் பிரதேசங்களில் இத்தொற்றுநீக்கும் மருந்து  தெளிக்கப்பட்டன.
இந்த தொற்று நீக்கும் செயற்பாட்டிற்கு ஹட்டன் டிக்கோயா நகர சபையின் தீயணைப்பு இயந்திரம், தண்ணீர் பவுசர் ஆகியன பயன்படுத்தப்பட்டன.

ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தலைவர் பாலச்சந்திரனின்  ஏற்பாட்டில் நடைபெற்ற இத்தொற்றுநீக்கும் செயற்பாட்டிற்கு நகரசபையின் எதிர்க்கட்சி தலைவர் ஏ.ஜே.எம்.பாமிஸ், பொதுச் சுகாதார உறுப்பினர், ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயணைப்பு பிரிவினர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

(ஹட்டன் விசேட நிருபர் - கே.சுந்தரலிங்கம்)

Thu, 04/02/2020 - 14:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை