கடந்த வருட உயிர்த்த ஞாயிறன்று மேற்கொள்ளப்பட்ட குண்டுத்தாக்குதல்களால் படுகொலை செய்யப்பட்ட அனைத்து மக்களையும் நினைவுகூரும் முகமாகவும் நாட்டுக்கு நிலையான சமாதானத்தையும் சகவாழ்வையும் வேண்டியும் திருகோணமலை கந்தளாய் இலாஹிய்யா ஜும்ஆ பள்ளிவாயலில் நேற்று விசேட தூஆப் பிரார்த்தனை நடத்தப்பட்டது.
இலங்கையிலுள்ள அனைத்துப் பள்ளிவாயல்களிலும் உயிர்த்த ஞாயிறு தாக்குதலை நினைவு கூர்ந்து பிரார்த்தனைகளை மேற்கொள்ளுமாறு
முஸ்லிம் சமய பண்பாட்டு அலுவல்கள் திணைக்களம் வேண்டுகோள் விடுத்ததையடுத்தே இவ் பிரார்த்தனைகள் நடைபெற்றன.
திருகோணமலை மாவட்டத்திலுள்ள திருகோணமலை, கந்தளாய், கிண்ணியா,மூதூர்,புல்மோட்டை,தோப்பூர்,முள்ளிப்பொத்தானை,மற்றும் நிலாவெளி போன்ற அனைத்துப்பிரதேசங்களிலுமுள்ள பள்ளிவாயல்களிலும் இவ் துஆப் பிரார்த்தனைகள் இடம்பெற்றன.
கந்தளாய் தினகரன் நிருபர்
from tkn