நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி கதிர்காமத்தில் ஜனாதிபதி வழிபாடு

ஜனாதிபதி பாரியாருடன் பங்கேற்பு

நாட்டுக்கும் மக்களுக்கும் ஆசிவேண்டி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பங்குபற்றுதலுடன் பிரித் பாராயண நிகழ்வொன்று வரலாற்று முக்கியத்துவமிக்க கதிர்காமம் புண்ணிய பூமியில் நேற்று முன்தினம் (25) இரவு நடைபெற்றது. கதிர்காமம் புண்ணியபூமிக்கு வருகைதந்த ஜனாதிபதி கதிர்காமம் ரஜமஹா விகாரையின் விகாராதிபதியும் றுஹுணு மாகம்பத்துவையின் தலைமை சங்கநாயக்கருமான சங்கைக்குரிய கொபவக தம்மின் தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு ஜனாதிபதி முன்னெடுத்துள்ள நிகழ்ச்சித்திட்டத்திற்கு தனது பாராட்டுக்களை தெரிவித்த தேரர், கொவிட் 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்திற்கு ஒரு மில்லியன் ரூபாவை அன்பளிப்பு செய்தார்.

ஜனாதிபதியுன் வருகையை நினைவு கூரும் வகையில் தேரரினால் நினைவுச் சின்னமொன்றும் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டது. கதிர்காமம் ஸ்ரீ அபிநவாராமைக்கு சென்ற ஜனாதிபதி விகாராதிபதி றுஹுணு மாகம்பத்துவே தலைமை சங்கநாயக்கர் சங்கைக்குரிய கபுகம சரணதிஸ்ஸ தேரரை சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.

ஜனாதிபதி கதிர்காமம் மஹா தேவாலயம் உள்ளிட்ட ஏனைய தேவாலயங்களுக்கும் சென்று சமயக் கிரியைகளில் ஈடுபட்டார். வரலாற்று முக்கியத்துவமிக்க றுஹுணு மஹா கதிர்காமம் தேவாலயத்தில் நடைபெற்ற முழு இரவு பிரித் பாராயண சமய உரையையும் ஜனாதிபதி செவிமடுத்தார்.

அயோமா ராஜபக்ஷ அம்மையார், றுஹுணு மஹா கதிர்காமம் தேவாலயத்தின் முன்னாள் பஸ்நாயக நிலமே ஷசீந்திர ராஜபக்ஷ, தற்போதைய பதில் பஸ்நாயக நிலமே தில்ஷான் ராஜபக்ஷ உள்ளிட்டோர் நிகழ்வில் கலந்துகொண்டனர்.

 

 

Mon, 04/27/2020 - 08:45


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை