சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாத் உட்பட சில நகரங்களில் 24 மணித்தியால ஊரடங்குச் சட்டம் நேற்று (06) முதல் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறித்த ஊரடங்குச் மறு அறிவித்தல் வரை பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ரியாத், தபுக், தம்மாம், டஹரன் உள்ளிட்ட எட்டு நகரங்களிலேயே ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதோடு, குறித்த நகரங்களுக்கு உள்நுழையவோ அல்லது, அந்நகரங்களிலிருந்து வெளியேறவோ தடை செய்யப்பட்டுள்ளது.
இவ்வேளையில் பொதுமக்கள் காலை 6.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரையான காலப்பகுதியினுள் அத்தியாவசிய தேவைகளுக்காக மாத்திரம் தங்களது குடியிருப்பு பகுதிகளுக்குள் செல்ல முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
from tkn