சில இடங்களில் நாளை வெப்பநிலை அதிகரிக்கும் சாத்தியம்

மேல், வடமேல், சப்ரகமுவ ஆகிய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா, மொனராகலை ஆகிய மாவட்டங்களிலும் நாளை வெப்பமான காலநிலை நிலவும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆகவே  பொதுமக்களை மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.

குறித்த பகுதிகளில் வாழும் பொதுமக்கள், போதுமானளவு தண்ணீர் அருந்த வேண்டும் என்பதோடு, களைப்படையும் நடவடிக்கைகளை தவிர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது. 

Wed, 04/01/2020 - 17:54


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை