மன்னார் தராபுரம் ஒருவாரத்துக்கு முடக்கம்

மன்னார் தராபுரம் பகுதியில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் காவியாக இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அப் பகுதி ஒருவாரத்துக்கு முடக்கப்பட்டுள்ளதாக மன்னார் மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.வினோதன் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில்,

குறித்த நபர் கடந்த மாதம் 15ஆம் திகதி இந்தோனேசியாவிலிருந்து புத்தளத்துக்கு வந்து பின் அதே மாதம் 18ஆம் திகதி மன்னார் தாராபுரத்தில் நடைபெற்ற மரண சடங்கு வீட்டுக்கு வந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் இவர் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இவர் ஒரு நோய் காவியாக உள்ளார் என மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் இவர் மன்னாரில் வந்து சென்ற பகுதி களான தராபுரம் மேற்கு மற்றும் தராபுரம் கிழக்கு ஆகிய பகுதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது.

இச் சம்பவம் மூன்று வாரங்கள் கடந்துள்ள நிலையில் இன்னும் ஒரு வாரத்துக்கு இப் பகுதியை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்த வேண்டிய தேவையுள்ளது.

மேலும் இந்த விடயத்தில் எவரும் பதட்டப்பட வேண்டிய தேவையில்லை. இந் நபருக்கு வைரஸ் தொற்று இல்லை என்பதுடன் இவர் நோய் காவியாகவே உள்ளார் என்பது மருத்துவ அறிக்கையில் குறிப்பிட்டப்பட்டுள்ளது.

தலைமன்னார் நிருபர்

Thu, 04/09/2020 - 06:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை