மின்னல் தாக்கியதில் இளைஞன் மரணம் மரங்களும் தீபிடிப்பு

வவுனியாவில் திடீரென பெய்த மழையின் போது இடி மின்னல் தாக்கியதில் மரத்தின் கீழ் இருந்த இளைஞன் ஒருவர் மரண மடைந்துள்ளதுடன், தென்னை மரங்களும் தீப்பற்றி எரிந்துள்ளன. வவுனியாவில் நேற்று மாலை திடீரென பெய்த மழையின் போது இடி மின்னல் தாக்கம் ஏற்பட்டுள்ளது.

இதன்போது வவுனியா நாகர் இலுப்பைக்குளம் பகுதியில் தென்னை மரமொன்றின் கீழ் நின்ற 25 வயதுடைய பெ.மங்களேஸ்வரன் என்ற இளைஞன் மரணமடைந்துள்ளhர். இதேவேளை இம் மின்னல் தாக்கத்தினால் தோணிக்கல், குளக்கட்டு வீதி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் மரங்கள் முறிந்து வீழ்ந்தும், எரிந்தும் நாசமாகியுள்ளன.

வவுனியா விசேட நிருபர்

Thu, 04/09/2020 - 06:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை