விவசாயிகளுக்கு நிலக்கடலை வழங்கி வைப்பு

முல்லைத்தீவில் தெரிவு செய்யப்பட்ட 25 பேரில் முதற்கட்டமாக 15 பேருக்கு நிலக்கடலை உற்பத்தி செய்வதற்கான விவசாய உள்ளீடுகள் வழங்கப்பட்டன.

கொக்கிளாய், கொக்குத்தொடுவாய் கிராமங்களைச் சேர்ந்த தெரிவு செய்யப்பட்ட 15 விவசாயிகளுக்கான சுமார் 2 இலட்சம் பெறுமதியான நீர் இறைக்கும் மின் மோட்டார், நீர்பாசன தொகுதிகள் மற்றும் விதை நிலக்கடலைகள்  என்பன நேற்று முன்தினம் வழங்கப்பட்டன.

உலக வங்கியின் நிதி உதவியின் கீழ் விதைகளை உற்பத்தி செய்யும் நோக்கோடு இந்த உதவித் திட்டங்கள் விவசாய திணைக்களம் ஊடாக  வழங்கப்பட்டுள்ளன.

சாதாரணமாக உற்பத்தி செய்யப்படும் நிலக்கடலையை விட விதைக்காக  உற்பத்தி செய்யப்படும் குறித்த நிலக்கடலை 300 ரூபாய்க்கு மேல் விற்கக் கூடிய நிலை காணப்படுவதால் இவர்களுக்கு இதனுடாக அதிகளவான வருமானத்தை ஈட்டக்கூடியதாக  இருப்பதோடு மேலும் 10 பயனாளிகளுக்கான குறித்த நிவாரண உதவித் திட்டங்கள் வழங்கப்படவுள்ளதாகவும் மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் தெரிவித்தார்.

மாங்குளம் குறூப் நிருபர்

Sat, 04/18/2020 - 07:29


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை