பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுமாறு வேண்டுகோள்

நாட்டில் தற்போது நிலவும் அசாதாரண நிலையைக் கருத்திற் கொண்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனம், ஜம்மியத்துல் உலமா, மாநகர சபை, பிரதேச சபை மற்றும் அக்கரைப்பற்று பிரதேசத்தில் உள்ள அனைத்து நலன்புரி அமைப்புக்களும் இணைந்து  நிதி மற்றும் மற்றும் பொருட்களை சேகரித்து வருகிறார்கள்.

கொரோனா வைரஸ் தொற்றினால் வீடுகளில் முடங்கியிருக்கும் வசதி குறைந்த பொதுமக்களுக்கு வழங்கப்படவிருக்கும் இத் திட்டத்திற்கு உதவிகள் வழங்க விரும்புவோர் 0672277361, 0767551136, 0765320258, எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறு அக்கரைப்பற்று அனைத்துப் பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் செயலாளர் எம்.பி.அப்துல் ஹமீட் கேட்டுள்ளார்.

அக்கரைப்பற்று மத்திய நிருபர்

 

Fri, 04/17/2020 - 13:35


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை