முல்லைத்தீவு நகர்ப் பகுதியில் தொற்று நீக்கும் நடவடிக்கை முன்னெடுப்பு

நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல்வேறு வேலைத்திட்டங்களை அரசாங்கம் மற்றும் முப்படையினர் முன்னெடுத்து வருகின்ற நிலையில் இன்றைய தினம் (02) முல்லைத்தீவு நகர்ப்பகுதி  வணிக நிலையங்கள் பொதுச்சந்தை மற்றும் மக்கள் ஒன்றுகூடும் இடங்களுக்கு தொற்று நீக்கிகள் விசிறும் நடவடிக்கையில் முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையினர் ஈடுபட்டனர்.

விசேட அதிரடிப் படையின் தலைமை அதிகாரியின் ஆலோசனைக்கு அமைவாக முல்லைத்தீவு மாவட்ட விசேட அதிரடிப் படையின் பொறுப்பதிகாரி நாணயக்காரவின் தலைமையில் குறித்த செயற்றிட்டம் முன்னெடுக்கப்பட்டது. இந்த வேலைத்திட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்களும் இணைந்திருந்தனர்.

இன்றுதொற்று நீக்கி விசிறும் நடவடிக்கையில் சுமார் 30-க்கும் மேற்பட்ட விசேட அதிரடிப்படை வீரர்கள் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

(எஸ். தவசீலன் - மாங்குளம் குறூப் நிருபர்)

Thu, 04/02/2020 - 14:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை