வவுனியா, மன்னாரில் மழைக்கான சாத்தியம்

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், தென், ஊவா,  வடமத்திய மாகாணங்களிலும் மன்னார், வவுனியா மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகல்  2.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் அநுராதபுரம், காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவான பலத்த மழை வீழ்ச்சி பதிவாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்று வீசக்கூடும். எனவே, மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்களை, வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

அத்தோடு, சப்ரகமுவ, மத்திய மாகாணங்களில் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை எதிர்பார்க்கப்படுவதாகவும், வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்தது.

 

Tue, 04/21/2020 - 10:26


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை