சுகாதார வசதிகளை வழங்கவும்; இ.போ.ச. ஊழியர்கள் கோரிக்கை

அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடும் இலங்கை போக்குவரத்துச் சபை பணியாளர்களுக்கு முகக் கவசங்களும் கையுறைகளும் வழங்குவதோடு, வைத்திய வசதிகளையும் பெற்றுக்கொடுக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அகில  இலங்கை போக்குவரத்து சேவை சங்கம் இவ்வேண்டுகோளை விடுத்துள்ளது.

அத்தோடு, இ.போ.சபையின் பஸ் வண்டிச் சாரதிகளுக்கும் நடத்துனர்களுக்கும் விசேட ஊக்குவிப்புத் தொகை வழங்கப்பட வேண்டும் என, அகில இலங்கை போக்குவரத்து சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் சேபால லியனகே தெரிவித்தார்.
 

Thu, 04/23/2020 - 13:12


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை