கொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில் பாரிய தீ

ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சிங்கமலை காட்டுப்பகுதிக்கு அண்மித்த பகுதியான கொட்டகலை யுலிபீல்ட் காட்டுப்பகுதியில்  நேற்று (03)  மாலை ஏற்பட்ட தீ பரவல் காரணமாக பல ஏக்கர் எரிந்து நாசமாகியுள்ளது.

மத்திய மாகாணத்தில் தற்போது நிலவி வரும் வரட்சியான காலநிலையினை அடுத்து இந்த தீ பரவல் ஏற்பட்டுள்ளதனாலும் கடும் காற்று நிலவி வருவதனாலும் தீ மிக வேகமாக பரிவியுள்ளது.

இதனால் இக்காட்டுப்பகுதியில் உள்ள பெறுமதிமிக்க மரங்கள் எரிந்து நாசமாகியுள்ளதுடன் அரியவகை தாவரங்கள், மூலிகைகள், எமது நாட்டுக்கே உரித்தான தாவரங்கள் உட்பட உயிரினங்கள் எரிந்து நாசமாகியிருக்கலாம் என பொது மக்கள் சந்தேகம் தெரிவிக்கின்றனர்.

(ஹட்டன் -கே. சுந்தரலிங்கம்) 

Sat, 04/04/2020 - 10:17


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை