விபத்தில் பொலிஸ் சார்ஜெண்ட் பலி

நாரம்மல – குளியாப்பிட்டி பிரதான வீதியில் இடம்பெற்றுள்ள வாகன விபத்தில், பொலிஸ் சார்ஜெண்ட் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

நேற்றிரவு (27), கடஹபொல  கல்வங்குவ சந்தியில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதன்போது குளியாப்பிட்டியிலிருந்து நாரம்மல நோக்கிப் பயணித்த இராணுவத்தினரின் கெப் வாகனமும், எதிர்த்திசையில் பயணித்த பொலிஸ் சார்ஜெண்டின் மோட்டார் சைக்கிளும் நேருக்குநேர் மோதி இவ்விபத்து சம்பவித்துள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இவ்விபத்தில் படுகாயமடைந்த பொலிஸ் சார்ஜெண்ட், நாரம்மல வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

நாரம்மல பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றுபவரும் பொத்துஹர பிரதேசத்தைச் சேர்ந்தவருமான 47 வயதுடைய பொலிஸ்  சார்ஜெண்ட் என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவ்விபத்து தொடர்பில் இராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.

இவ்விபத்து தொடர்பாக மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Tue, 04/28/2020 - 11:18


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை