நாட்டிலுள்ள அனைத்து மதுபான விற்பனை நிலையங்களையும் மறு அறிவித்தல் வரை மூடுமாறு பணிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இது தொடர்பில் பணிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டுள்ள பகுதிகளில் மதுபான விற்பனை நிலையங்களை திறப்பதற்கு நேற்று (20) அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
ஆயினும், இதன்போது பெரும்பாலான மதுபான விற்பனை நிலையங்களுக்கு அருகில் கொரோனா வைரஸ் பரவலுக்கு எதிராக சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tue, 04/21/2020 - 10:57
from tkn