கொரோனா பீதி காரணமாக, காரைதீவில் வைத்தியசாலைக்கு வரமுடியாத கிளினிக் நோயாளர்களுக்கு அவரவர் வீட்டு வாசலிற்கு மருந்துப்பொருட்களை கொண்டு சென்று வழங்கப்பட்டுவருகிறது.
ஒரு மாத காலத்திற்குத் தேவையான மருந்துப் பொருட்களை பாதுகாப்பு முறைப்படி அம்பியூலன்சில் இருந்தவாறு உரிய அட்டையைப் பெற்று வைத்தியசாலை ஊழியர்கள் வழங்கி வருகின்றார்கள்.
இது தொடர்பான அறிவித்தல்கள் ஊர் பூராக ஒலிபரப்புச் செய்யப்பட்டிருந்தது.
இந்த நடமாடும் வைத்திய சேவையையிட்டு பொதுமக்கள் வைத்தியசாலை நிருவாகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
காரைதீவு குறூப் நிருபர் சகா
Tue, 04/14/2020 - 21:08
from tkn