நாட்டில் ஏற்பட்டுள்ள தற்போதைய அசாதரண சூழல் காரணமாக நாளாந்த தொழிலை இழந்த பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கிவைக்கும் நிகழ்வு இன்று (07) துறைநீலாவணை கிராமத்தில் இடம்பெற்றது.
களுவான்சிக்குடி சமூக வலுவூட்டலுக்கான மக்கள் அமைப்புபின் தலைவர் எஸ். ஜேசு சகாயம், இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் ரி.வசந்தராஜா, செயலாளர் எஸ்.மதிசூதன், பொருளாளர் வி.சக்திவேல், கிராமசேவை உத்தியோகத்தர் கே.சுரேஸ் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பலரும் இதில் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் இலங்கை செஞ்சிலுவை சங்கத்தினரால் COVID-19 இன் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறித்து விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கி பொதுமக்கள் அறிவூட்டப்பட்டனர்.
(பெரியநீலாவணை விசேட நிருபர்)
Tue, 04/07/2020 - 13:29
from tkn