ஆலயத்தில் தொண்டாற்றியவர் சடலமாக மீட்பு

யாழ்ப்பாணம், முற்றவெளியிலுள்ள முனியப்பர் ஆலயத்தில் தொண்டாற்றி வந்த முதியவர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

நேற்று (11) மாலை இவரது சடலம் மீட்கப்பட்டுள்ளதோடு, அவரை அடையாளம் காண முடியவில்லை என்று பொலிஸார், யாழ்ப்பாணம் நீதிவான் முன்னிலையில் அறிக்கை சமர்ப்பித்தனர்.

முதியவரின் இறப்பு விசாரணையை முன்னெடுக்க திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமாருக்கு உத்தரவிட்ட நீதிவான், விசாரணை அறிக்கையை மன்றுக்கு சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

திடீர் மரண விசாரணை அதிகாரி, நேற்று மாலை மரண விசாரணைகளை முன்னெடுத்தார்.

சடலம் அடையாளம் காண்பதற்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.  66 வயது மதிக்கத்தக்க முதியவரே சடலமாக மீட்கப்பட்டுளார். அதனால் உறவினர்கள் யாராவது இருப்பின் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையுடன் தொடர்புகொள்ளுமாறு கோரப்பட்டுள்ளது. 

சடலத்தை குறிப்பிட்ட நாட்களுக்குள் எவரும் உரிமை கோராதவிடத்து, அரச செலவில் அடக்கம் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

(யாழ். விசேட நிருபர்)

Sun, 04/12/2020 - 10:40


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை