சுகாதார பிரிவினரின் பாதுகாப்பு கருதி விசேட செயற்திட்டங்கள்

அமைச்சர் பவித்ரா தலைமையில் ஆராய்வு

கொரோனா வைரஸ் பரவும் வீதம் அதிகரித்து காணப்படுவதால் அதனை கட்டுப்படுத்தும் நோக்கில் எடுக்கப்படவேண்டிய விசேட நடவடிக்கைகள் தொடர்பான தீர்மானங்களை எடுப்பதற்கான செயற்திறன் குழுக் கூட்டம் நேற்று நடைபெற்றது.

இந்த விசேட செயற்திறன் குழு சுகாதார தேசிய வைத்திய பிரிவினரால் நிறுவப்பட்டது.

இந்த கூட்டம் சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னி ஆராச்சி தலைமையில் நடைபெற்றது.

இதில் வைத்திய நிபுணர்கள், வைத்திய சேவை அதிகாரிகள் மற்றும் விசேட வைத்தியர்கள் அடங்கிய 35 பேர் கலந்துகொண்டனர்.

இங்கு ஊரடங்கு தளர்த்தப்பட்ட மாவட்டங்களில் உள்ள வைத்தியசாலைக்கு வரும் நோயாளிகளுக்கு தேவையான சகல வசதிகள் பற்றி ஆராயப்பட்டது.

அத்துடன் இந் நோயாளிகளை பரிசோதனை செய்யும் வைத்தியர்கள் உட்பட வைத்தியசாலையின் அனைத்து பிரிவினரின் பாதுகாப்பு கருதி குறிப்பிட்ட சில நிர்வாகக் குழுவினர் மூலம் சேவைகளை பெறுவது தொடர்பாகவும் ஆராயப்பட்டது.

அவர்களுக்கு தேவையான பாதுகாப்பு உடைகள் மற்றும் உபகரணங்களை பெற்றுக் கொடுப்பது தொடர்பாகவும் இவ் விசேட கலந்துரையாடலில் ஆராயப்பட்டது.

கொரோனாவைக் கட்டுப்படுத்தும் செயற்திட்டத்தின் போது பிரதேச மட்டத்தில் பெரும் சேவையை நடத்தும் சுகாதார அதிகாரிகள் காரியாலயங்களுக்கு அவசியமான வாகன வசதிகளையும், அதிகளவில் பரிசோதிக்கப்படுகின்ற PCR அளவை மேலும் அதிகமாக பரிசோதிக்க தேவையான உபகரணங்களை பெற்றுக் கொள்வதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியிடம் பெற்றுக்கொள்ளும் கடனுதவி தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது.

கொவிட்19 வைரஸை கட்டுப்படுத்துவதற்கான சுகாதார அமைச்சின் கீழ் நடைபெறும் சுகாதார அவசரப் பிரிவு பிரதேச மட்டத்தில் நடைமுறைபடுத்த அரச நிர்வாக மற்றும் உள்துறை அமைச்சின் செயலாளருடன் கலந்துரையாடி தேவையான அறிவுரைகளை வழங்கி இச் செயற் திட்டத்தை மேலும் அதிகரிப்பது தொடர்பாகவும் கலந்துரையாடப்பட்டது. இந்த நிகழ்வில் சிறப்பு செயல்திறன் மறு ஆய்வுக் குழுவை பிரதி நிதித்துவப்படுத்தி,  சுகாதார சேவை மற்றும் சுதேச மருத்துவ அமைச்சின் செயலாளர் பத்ராணி ஜெயவர்தன, மேலதிக செயலாளர்கள் வைத்தியர் சுனில் த அல்விஸ், வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க, சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் வைத்தியர் அனில் ஜாசிங்க, சுகாதார சேவைகள் துணை இயக்குநர் வைத்தியர் அமல் ஹர்ஷ த சில்வா, வைத்தியர் லால் பனாபிடிய, வைத்தியர் பபா பலிஹவடன, சுகாதார அமைச்சரும் ஜனாதிபதியின் தனியார் செயலாளரும் சபரகமுவா மாகாண சபை தலைவருமான காஞ்சன ஜயரத்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

நீர்கொழும்பு நிருபர்

Wed, 04/29/2020 - 06:22


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை