பாராளுமன்றத்தை நான் கூட்டப் போவதாக தெரிவிக்கப்படுவது வதந்தி

பாராளுமன்றத்தை நான் கூட்டப் போவதாக தெரிவிக்கப்படுவது வதந்தி-I Would Reconvene the Parliament Unilaterally are False-Karu Jayasuriya

 

 

தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் பதிவொன்றை இட்டுள்ள, 08 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய, தான் பாராளுமன்றத்தை ஒரு தலைப்பட்சமாக கூட்டப்போவதாக பரவும் வதந்தி பொய்யானது என தெரிவித்துள்ளார்.

அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,

 

 

தேர்தல் திகதி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், (மீண்டும்) ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தாது, அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும். அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மையை பாதிக்கக்கூடியது. உண்மையான நம்பிக்கையுடன், இலங்கையில் கொவிட்-19 நோயை, எவ்வித அரசியலும் இன்றி, சுகாதார மற்றும் பொருளாதார சவாலாகக் கருதி கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.

எனவும் தெரிவித்துள்ளார்.

Thu, 04/23/2020 - 12:24


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை