கொரோனாவு பிரச்சினைக்குள் அரசியலமைப்புப் பிரச்சினை தேவையில்லை. நான் ஒருதலைப்பட்சமாக பாராளுமன்றத்தைக் கூட்டப் போவதாக பரவும் வதந்தி பொய்யானது. பிரச்சினையைத் தவிர்க்க நிறைவேற்றுத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். முரண்பாடுகளின் போது நீதிமன்ற கட்டளைக்கு மதிப்பளிப்பது எனது கடமையாகும்.
— Karu Jayasuriya (@KaruOnline) April 23, 2020
தனது உத்தியோகபூர்வ ட்விற்றர் மற்றும் பேஸ்புக் கணக்குகளில் பதிவொன்றை இட்டுள்ள, 08 ஆவது பாராளுமன்றத்தின் சபாநாயகர் கருஜயசூரிய, தான் பாராளுமன்றத்தை ஒரு தலைப்பட்சமாக கூட்டப்போவதாக பரவும் வதந்தி பொய்யானது என தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ள அவர்,
As the election date is now fixed, all effort must be made not to allow a constitutional crisis, that can cost the nation dearly of its economy and legitimacy. With good faith, I hope Sri Lanka can confine #Covid-19 to a health and economic challenge, not a political one too.
— Karu Jayasuriya (@KaruOnline) April 22, 2020
தேர்தல் திகதி தற்போது நிர்ணயிக்கப்பட்டுள்ளதால், (மீண்டும்) ஒரு அரசியலமைப்பு நெருக்கடியை ஏற்படுத்தாது, அனைத்து முயற்சிகளும் செய்யப்பட வேண்டும். அது நாட்டின் பொருளாதாரம் மற்றும் இறையாண்மையை பாதிக்கக்கூடியது. உண்மையான நம்பிக்கையுடன், இலங்கையில் கொவிட்-19 நோயை, எவ்வித அரசியலும் இன்றி, சுகாதார மற்றும் பொருளாதார சவாலாகக் கருதி கட்டுப்படுத்த முடியும் என்று நம்புகிறேன்.
எனவும் தெரிவித்துள்ளார்.
from tkn