அக்கரப்பத்தனையில் சதொச நிலையம் திறப்பு

லங்கா சதொச விற்பனை நிலையம் ஒன்று அக்கரப்பத்தனை மன்ராசி நகரில் நேற்றுமுன்தினம் (15) இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவரும் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினருமான பி.சக்திவேல் தலைமையில் திறந்து வைக்கப்பட்டது.

பெருந்தோட்ட மக்கள் செறிந்து வாழும் ஹோல்புறூக், அக்கரப்பத்தனை, மெராயா, டயகம மன்ராசி போன்ற பகுதி மக்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்துள்ளமையால் அத்தியாவசியப் பொருட்களை கொள்வனவு செய்வதில் பல்வேறு சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.

இந்த பிரதேச மக்களின் நலன் கருதி லங்கா சதொச விற்பனை நிலையம் ஒன்றை அமைக்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது. அதன் பிரகாரமே நேற்றுமுன்தினம் இந்த சதோச பல்பொருள் நிலையம் திறந்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அக்கரப்பத்தனை பிரதேச சபையின் தலைவர் கே.கதிர்செல்வம் உட்பட பல முக்கியஸ்தர்கள் கலந்துகொண்டனர்.

(தலவாக்கலை குறூப் நிருபர்)

Fri, 04/17/2020 - 09:02


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை