அடையாள அட்டையின் இறுதி இலக்கத்துக்கமைய வெளியில் செல்ல அனுமதி

தேசிய அடையாள அட்டையின் இறுதி இரண்டு இலக்கங்களின் அடிப்படையில் அத்தியாவசிய தேவைகளுக்காக வீட்டிலிருந்து வெளிச்செல்ல நாளை திங்கட்கிழமை (27) முதல் அனுமதி வழங்கப்படவுள்ளது.

அந்த வகையில் திங்கட்கிழமை நாட்களில் வெளிச்செல்ல இலக்கம் 1அல்லது 2 என்ற இலக்கங்களை தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கங்களாக கொண்டுள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.

வாரத்தின் ஏனைய நாட்களில் வெளிச்செல்வதற்கு பின்வருமாறு இடமளிக்கப்பட்டுள்ளது..

செவ்வாய்க்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 3அல்லது 4 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்

புதன்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 5 அல்லது 6 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்

வியாழக்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 7 அல்லது 8 என்ற இலக்கத்தை கொண்டவர்கள்

வெள்ளிக்கிழமை:- அடையாள அட்டையின் இறுதி இலக்கமாக 9 அல்லது 0 என்ற இலக்கத்தை கொண்டவர்கள் வெளியில் செல்லும்போது, கொரோனா தடுப்பு சுகாதார நடைமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sun, 04/26/2020 - 07:43


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை