தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்படுவதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாக தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டிருந்த நிலையில், நாளை (08) திறக்கத் திட்டமிடப்பட்டிருந்தது.
எனினும், தற்போது நாட்டில் நிலவும் அசாதாரண நிலைமை மற்றும் பொருளாதார மத்திய நிலையத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் சுகாதார விதிமுறைகளை பின்பற்றமையால் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, வர்த்தக சங்கத்தின் தலைவர் மேலும் தெரிவித்துள்ளார்.
Tue, 04/07/2020 - 15:11
from tkn