தபால் விநியோகம் இன்று ஆரம்பம்

தபால் சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், கடிதங்களை விநியோகிக்கும் நடவடிக்கை இன்று (22) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் வகையில், ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டதை தொடர்ந்து சுமார் ஒரு மாதமாக தபால்  சேவைகள் இடைநிறுத்தப்பட்டிருந்தன.

தற்போது ஊரடங்குச் சட்டம் நீக்கப்பட்டுள்ள பகுதிகளில்  தபால்களை விநியோகிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார். 

Wed, 04/22/2020 - 13:47


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை