மேல் மாகாண ஆளுநருடன் அமைச்சர் தொண்டமான் சந்திப்பு

மேல் மாகாண ஆளுநருக்கும் அமைச்சர் தொண்டமானுக்கும் இடையில் நேற்றுமுன்தினம் ஆளுநர் அலுவலகத்தில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.

பெருந்தோட்டப் பிராந்தியங்களுக்கான பிரதமரின் இணைப்புச் செயலாளர் செந்தில் தொண்டமான் உட்பட பல முக்கியஸ்தர்கள் இந்தச் சந்திப்பில் கலந்துகொண்டனர்.

கொழும்பு உட்பட நான்கு மாவட்டங்களுக்கு ஊரடங்குச் சட்டம் தொடர்கின்ற பின்புலத்தில் ஏனைய மாவட்டங்களில் மக்களின் அன்றாடச் செயற்பாடுகள் வழமைக்குத் திரும்பி வருகின்றன. கொழும்பில் நிர்க்கதியாகியுள்ள மலையக இளைஞர், யுவதிகள் அவர்களது சொந்த ஊர்களுக்கு திரும்பும்வரை அவர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை முன்னெடுப்படு குறித்து இதன்போது தீர்க்கமாக இருவரும் கலந்துரையாடியதாக இ.தொ.காவின் ஊடகப்பிரவு தெரிவித்துள்ளது.

Wed, 04/22/2020 - 09:15


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை