குடிமக்களால் நிரம்பி வழிந்த மதுபான கடைகள்

யாழ்ப்பாணம் உட்பட வடக்கில் நேற்று ஊரடங்கு தளர்த்தப்பட்ட நிலையில் மதுபான விற்பனை நிலையங்களில் குடிமக்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

காலை 9 மணியளவிலிருந்தே மதுபான கடைகளில் குடிமக்கள் வரிசைகளில் நின்றதை காணமுடிந்தது. அத்தியாவசியப் பொருட்கள் வாங்குவதுக்கு வரிசையில் நின்ற மக்களை விட மதுபான கடைகளில் வரிசையில் நின்றவர்கள் அதிகமாக இருந்ததை அவதானிக்க முடிந்தது.

மேலும் பல இடங்களில் வாடிக்கையாளர் அதிகமாக காணப்பட்டதால் இராணுவத்தினர் வரவழைக்கப்பட்டு அவர்களை சமுக இடைவெளி அடிப்படையில் ஒழுங்குபடுத்தியிருந்ததை அவதானிக்க முடிந்தது.

கரவெட்டி தினகரன், சரசாலை நிருபர்

Tue, 04/21/2020 - 09:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை