ஊரடங்கை மீறி கைதானோர் 8,739ஆக உயர்வு

கம்பஹா, கொழும்பு, களுத்துறை, புத்தளம், கண்டி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் இன்று (01) காலை 6.00 மணி முதல் நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில் பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 288 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அத்தோடு இக்காலப்பகுதியில் 71 வாகனங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த மார்ச் 20ஆம் திகதி முதல் நாட்டில் ஊரடங்குச் சட்டம் பிறப்பிக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இதற்கமைய மார்ச் 20ஆம் திகதி மாலை 6.00 மணி முதல் இன்று (01) நண்பகல் 12.00 மணி வரையான காலப்பகுதியில்  பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் 8,739 பேர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதோடு, 2,149 வாகனங்களும் இக்காலப்பகுதியில் கைப்பற்றப்பட்டுள்ளன.  

Wed, 04/01/2020 - 15:04


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை