இரத்தினபுரியில் 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு

இரத்தினபுரியில் 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு-67 From 23 Family Sent to Diyatalawa Quarantine Center

இரத்தினபுரி பொலிஸ் பிரிவிலுள்ள 67 பேர் தியத்தலாவை தனிமைப்படுத்தல் முகாமிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.

கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்பை பேணிய சந்தேகத்தின் பேரில் அவர்கள் இவ்வாறு தனிமைப்படுத்தலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

23 குடும்பங்களைச் சேர்ந்த 67 பேரே இவ்வாறு தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இடர் வலயங்கள் தவிர்ந்த ஏனைய பிரதேசங்களில் தற்போது ஊரடங்குச் சட்டம் தளர்த்தப்பட்டள்ள போதிலும், அவ்வலயத்திற்கு உட்படாத இரத்தினபுரி மற்றும் பெல்மதுளை ஆகிய பொலிஸ் பிரிவுகளுக்கு மறு அறிவித்தல் வரை ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுப்பட்டுள்ளது.

நேற்று (08) இரவு பொலிஸ் ஊடகப் பிரிவினால் இவ்வறிவித்தல் விடுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Thu, 04/09/2020 - 12:19


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை