வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைந்துள்ள கொரோனோ தனிமைப்படுத்தல் முகாமிலிருந்து 45 பேர் இன்று (02) வீடு திரும்பினர்.
கொரோனோ வைரஸ் பரவலை கருத்திற் கொண்டு, வெளிநாட்டிலிருந்து வருகைதந்த பயணிகள் 14 நாட்கள் தனிமைப்படுத்தி கண்காணித்தலுக்கு உட்படுத்தப்படுகின்றனர்.
அந்த வகையில் வவுனியா பம்பைமடு இராணுவ முகாமில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தனிமைப்டுத்தல் முகாமுக்கு கடந்த 13 ஆம் திகதி இத்தாலி, தென்கொரியா, ஈரானிலிருந்து வந்த 212 பேர் கொண்டுவரப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் குறித்த முகாமில் தங்கவைக்கப்பட்டிருந்த 45 பேர் இன்று (02) விடுவிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் அனைவரும் இத்தாலி நாட்டில் இருந்து வருகை தந்திருந்த நிலையில் அவர்களுக்கு கொரோனா நோய்த்தொற்று இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் அவர்கள் தமது வதிவிடங்களுக்கு செல்ல அனுமதிக்கபட்டிருந்தனர்.
56 படைப்பரிவின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் ஜாலித தலைமையில் அவர்கள் வழிஅனுப்பி வைக்கப்பட்டிருந்தனர்
(வவுனியா நிருபர்)
from tkn