18 கிலோ கொழுந்து பறிக்குமாறு தோட்ட நிர்வாகம் உத்தரவு

கொட்டகலை கிரேக்லி தோட்டத்தில் தொழிலாளர் போராட்டம்

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழ்நிலைக்கு மத்தியிலும் 18 கிலோ கொழுந்தை கட்டாயம் பறிக்கவேண்டும் என கொட்டகலை பிரதேச சபைக்குட்பட்ட கிரேக்லி தோட்டத் தொழிலாளர்களுக்கு, தோட்ட நிர்வாகம் கட்டளையிட்டுள்ளது.

தோட்ட நிர்வாகத்தின் இந்த அடக்குமுறை உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொழிலாளர்கள் நேற்று பணி புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடும் வறட்சி நிலவுகின்றது. நாட்டில் அதாசாரண சூழ்நிலையும் நிலவுகின்றது. இந்நிலையில் 18 கிலோ கொழுந்து பறிப்பது இலகுவான விடயமல்ல.

14 கிலோ கொழுந்து எடுத்தால் அரைநாள் பெயரே விழுகின்றது. எனவே, இதற்கான தீர்வு கிடைக்கும்வரை பணிப்புறக்கணிப்பு தொடரும்.” எனத் தொழிலாளர்கள் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

(பூண்டுலோயா நிருபர்)

Thu, 04/09/2020 - 12:11


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை