16 நாட்களின் பின் மெனிங் சந்தை திறந்துவைப்பு

கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து, கடந்த 12ஆம் திகதி மூடப்பட்ட கொழும்பு, மெனிங் பொதுச் சந்தையானது, 16 நாட்களின் பின்னர் இன்று (29) அதிகாலை 04 மணிக்கு மீண்டும் திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொருட்களை ஏற்றிவரும்  லொறிகள் வந்த வண்ணமுள்ளதாக, மெனிங் பொதுச் சந்தைக்கான வர்த்தக சங்கத்தின் தலைவர்  லால் ஹெட்டிகே தெரிவித்துள்ளார். 

Wed, 04/29/2020 - 12:13


from tkn

கருத்துரையிடுக

புதியது பழையவை